Press "Enter" to skip to content

நாளை முதல் லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறும் – லாஃப்ஸ் நிறுவனம்

நாளை முதல் சந்தைக்கு லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எரிவாயுவை கொண்டு வரும் கப்பல் ஒன்று இன்று நாட்டை வந்தடைந்தது.

குறித்த கப்பலில் 3,500 மெற்றிக் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் சந்தையில் மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மக்கள் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *