Press "Enter" to skip to content

ரயிலில் மோதுண்டு இரண்டு யானைகள் பலி

ஹபரனை காவல்துறை பிரிவின் 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்தன.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற தொடருந்து ஒன்றுடன் காட்டுயானைகள் நேற்றிரவு மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் மற்றுமொரு யானை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து காரணமாக கொழும்பு – ஹபரனைக்கு இடையிலான தொடருந்து போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹபரனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *