Press "Enter" to skip to content

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பலாங்கொடை நகரில் அவர்கள் இன்று மதியம் முதல் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால், பலாங்கொடை நகர பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *