Press "Enter" to skip to content

ஓமானிலிருந்து இலங்கைக்கு நேரடியாக யூரியா அனுப்ப இந்தியா நடவடிக்கை

ஓமானில் இருந்து நேரடியாக இலங்கைக்கு யூரியா உரத்தை அனுப்பி வைப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைக்கு 65, 000 மெட்ரிக் டன் யூரியாவினை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்த தொகுதி ஓமானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு நேரடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய உயர்மட்ட தரப்பினருக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *