Press "Enter" to skip to content

ரஷ்ய விமானம் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இடைநிறுத்தம்!

ரஷ்ய எரோஃப்ளொட் விமானம் நாட்டில் இருந்து வெளியேற விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடையை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

ரஷ்ய எரோஃப்ளொட் விமானம் நாட்டில் இருந்து வெளியேற விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு சட்டமா அதிபர் இன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக கோரியிருந்தார்.

இதனை ஆராய்ந்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இந்த தடையை நீக்கியுள்ளது.

இந்த விமானம் 191 பயணிகள் மற்றும் 30 பணிக்குழாமினருடன் கடந்த 2ஆம் திகதி ரஷ்ய நோக்கி பயணிக்கவிருந்த நிலையில் நீதிமன்ற இடைக்கால தடைக்காரணமாக கட்டுநாயக சர்வதேச விமான நிலையத்தில் தடுக்கப்பட்டது.

இதன்காரணமாக ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கான வர்த்தக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த ‘எரோஃப்ளொட்| விமானம் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேநேரம், இது தொடர்பாக ரஷ்யா தமது அதிருப்தியையும் வெளியிட்டிருந்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கப்படாத வகையில் இந்த பிரச்சினையை தீர்க்குமாறும் கோரியிருந்தது.

அத்துடன் இந்த பிரச்சினை இரண்டு நாடுகளுக்கும் இடையிலானது அல்லவென்றும் இரண்டு தனிப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான சட்டப்பிரச்சினையே என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிவிகார அமைச்சு ஊடாக ரஷ்யாவிடம் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *