Press "Enter" to skip to content

கொழும்பிற்கு உலக சுகாதார அமைப்பு டெங்கு எச்சரிக்கை

கொழும்பு மாவட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பு டெங்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 05ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இலங்கையில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக மேல் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கடந்த வாரம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *