பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் கிளைத்தலைவர்களுக்கான வாராந்த கலந்துரையாடலின் போது கலந்து கொண்ட 21 பேருக்கு தனது உற்பத்தியை ஒருவருக்கு தலா இரண்டு பக்கெற்றுக்கள் வீதம் வழங்கினார்.
அரசாங்க அதிபரின் முன்மாதிரியான குறித்த விடயத்துக்கு நன்றி கூறிய பதவிநிலை உத்தியோகத்தர்கள் இவ்வாறு அனைவரும் தமது சூழலில் உணவுப் பயிர்களை உற்பத்தி செய்து பரிமாறிக்கொள்வதே நாட்டில் தற்போது நிலவிவரும் நெருக்கடியான காலகட்டத்துக்கு பொருத்தமாக அமையும் என கூறி நன்றி தெரிவித்தனர்.
அரசாங்கம் நாடளாவிய ரீதியில் அரச திணைக்களங்கள் மற்றும் வீடுகள், விடுதிகளில் வீட்டுத்தோட்டங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் எமது மாவட்ட அரசாங்க அதிபரின் குறித்த செயற்பாடு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
மேலும் குறித்த கலந்துரையாடலில் கடந்த கூட்ட தீர்மானத்திற்கமைய மாவட்ட செயலக வளாகத்தில் வீட்டுத்தோட்ட செய்கையை மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment