மத்திய கிழக்கு நாடுகள், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி ராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது நிலவும் நிலைமையைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கு உதவுவதற்கு இந்த நாடுகளின் உதவியைக் கோரிய ஜனாதிபதி, அந்த நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்
Be First to Comment