Press "Enter" to skip to content

சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் சிசுவின் சடலம் மீட்பு!

நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நாகசேனை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில், அதாவது நாகசேனை வலகா தோட்டத்திற்கு செல்லும் வீதி ஓரத்தில், இன்று, சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சென்ற சிலர், சிசுவின் சடலத்தை அவதானித்துள்ளனர்.
அதன் பின்னர், லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டனர்.
எனினும், சிசு யாருடையது என, இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சுமார் 6 மாத காலம் நிறைவடைந்த சிசுவின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணையின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக, சிசுவின் சடலம், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில், லிந்துலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *