Press "Enter" to skip to content

லங்கா ஐஓசி பிரதிநிதிகள் கடற்தொழில் அமைச்சர் சந்திப்பு

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற பல நாள் கலன்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சீராக தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நேற்று முன்தினம் கடலுணவு ஏற்றுமதியாளர்களை சந்தித்து எரிபொருள் கொள்வனவிற்கு தேவையான டொலர்களை பெற்றுக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடிய நிலையில், லங்கா ஐ.ஓ.சி. நிறுவன அதிகாரிளுடன் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 10.06.2022

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *