Press "Enter" to skip to content

யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் 30 கடைகளில் அதிரடி சோதனை..! கொள்ளை விலைக்கு பொருட்களை விற்ற 7 பேர் சிக்கினர்..

யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி பிரதேசங்களில் பாவனையாளர் அதிகாரசபை நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையின்போது அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பாவனையாளர் அதிகாரசபை வழக்கு தாக்கல் செய்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி பிரதேசத்தில் 30இற்கு மேற்பட்ட வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த ஐந்து விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்,

நூடில்ஸ் மற்றும் பிஸ்கட் வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக இரண்டு விற்பனை நிலையங்களும் மொத்தமாக ஏழு வியாபார நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென

பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுமென அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *