Press "Enter" to skip to content

சந்தேகத்தால் மனைவியை கொன்ற கணவன் பொலிஸில் சரண்! மட்டக்களப்பில் குரூரம்!!

தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு கணவன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை – மகிழடித்தீவில் இடம்பெற்றுள்ளது.

மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான சிவலிங்கம் கஜேந்தினி (வயது-20) என்பவரே இவ்வாறுகொல்லப்பட்டார்.

மனைவி மீது கணவனுக்கு சந்தேகம் இருந்ததாகவும், இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிடுவதும் வழக்கமாக இருந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையிலேயே இன்று அதிகாலை தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர், தனது இரண்டரை வயது குழந்தையை சகோதரியின் வீட்டுக்கு கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான நபர் 30 வயது உடையவர் என்றும் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *