Press "Enter" to skip to content

கனடாவில் காணாமல் போன தமிழர்

தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர் குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்த நபர் தொடர்பான முழு தகவல்களை டொராண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, 55 வயதான ஹரிஹரன் விஸ்வலிங்கம் என்ற நபர் கடைசியாக கடந்த மே மாதம் 31ஆம் திகதி காணப்பட்டார். கிப்லிங் சுரங்க நிலையத்தில் ஹரிஹரன் கடைசியாக காணப்பட்ட பின்னர் காணமல் போயுள்ளார்.

தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை

 

அவர் அடிக்கடி TTC வாகனங்களில் பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட ஹரிஹரன் சாதாரண உடல்வாகுடன் இருப்பார்.

காணாமல் போன போது அவர் எந்த நிறத்தில் மற்றும் எது மாதிரியான உடைகளை அணிந்திருந்தார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.

இந்நிலையில், ஹரிஹரன் தொடர்பில் எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *