சுவிட்சர்லாந்தில் முன்னெடுக்கப்பட்ட தீ மிதி நிகழ்வில் பங்கேற்றவர்களில் 25 பேர் காயங்களுடன் மருத்துவமனையை நாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வடக்கு சுவிட்சர்லாந்தில் சிறப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக சூடான நிலக்கரியின் குறுக்கே நடக்க வைக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இந்த நிகழ்வில் 13 பேர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையை நாடியுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவசர மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் 10 ஆம்புலன்ஸ் சேவைகள் தொடர்புடைய பகுதிக்கு விரைந்துள்ளன.
Be First to Comment