Press "Enter" to skip to content

போலி கணக்குகள், தவறான தகவல்களுக்கு இனி கடுமையான நடவடிக்கை

போலி கணக்குகள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க சகல சமூக ஊடக வலைத்தளங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.

சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் மெட்டா, கூகுள், டுவிட்டர் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

அதன்படி, போலிக் கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக அபராதம் விதிக்கும் முறை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான தகவல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *