Press "Enter" to skip to content

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தென்கொரியா பூரண ஆதரவை வழங்கும் – ஜியோங் வுன்ஜின்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங் வுன்ஜின் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான 45 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கைக்கு தென்கொரிய அரசாங்கம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் தூதுவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, தற்போதைய நிலைமையில் இருந்து மீள தென்கொரிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்குமாறும், கைத்தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு தொழில்முயற்சியாளர்களை அழைக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *