Press "Enter" to skip to content

மண்ணெண்ணெய் விலை 370.00 ரூபாவாக வேண்டும்.

இம்மாத இறுதிக்குள் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு லிற்றர் மண்ணெண்ணெய் ரூ.87.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் மண்ணெண்ணெக்கு 283.00 ரூபா நட்டத்தைச் சந்தித்து வருகின்றது. இதனால் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 370.00 ரூபாவாக அதிகரிக்கப்படும் என கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *