நாட்டின் பொருளாதார மீட்சியை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வழங்கவுள்ளார்.
பொருளாதார மீட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அறிவிக்கும் வரையில் இரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் அனுரகுமார் திஸாநாயக்க மற்றும் சமகி ஜன பலவேகய (எஸ்ஜேபி) தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
Be First to Comment