Press "Enter" to skip to content

யாழ் அரச அதிபரின் முயற்சியால் தனியார் பேருந்து உரிமையாளர்களின் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

யாழ் மாவட்ட தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் நாளை முதல் சீரான முறையில் விநியோகிக்கப்படும் என இன்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டுள்ளதால் தினம் தனியார் பஸ் உரிமையாளர்கள் முன்னெடுக்கப்பட இருந்த பகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

யாழ்மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும்  தனியார் பேருந்து களுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்  சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக  வழங்கப்பட்டு வரும் நிலையில்

இன்று காலை முதல் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் வழங்கப்படாதமையை  கண்டித்தும் மேலும் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலையில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளைய தினம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட மாட்டாது  என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த நிலையில் உடனடியாக குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இரு தரப்பினருடனும் யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது நாளை முதல் சீரான முறையில் தனியார் பேருந்துகளுக்கு  எரிபொருள் வழங்கப்படும் எனவும் அதன் அடிப்படையில் தாம் வழமைபோல் சேவையில் ஈடுபட உள்ளதாகவும்யாழ் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் இபோச மற்றும் தனியார் பேருந்துசங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *