Press "Enter" to skip to content

திங்கட்கிழமை பாடசாலைகள் நிலை என்ன?

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக மூடப்பட்டுள்ள சில பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் நடத்தப்படும் முறை தொடர்பில் நாளை (24) மாகாண மட்டத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும். நேற்று பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை 65 வீதமாக பதிவாகியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *