Press "Enter" to skip to content

துவிசக்கர வண்டிகளுக்கு கடன் வசதி!

துவிசக்கர வண்டிகளுக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகளை லீசிங் நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதை அடுத்து எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், பலர் துவிசக்கர வண்டிகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனினும் துவிசக்கர வண்டிகளின் விலை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதால், சில லீசிங் நிறுவனங்கள் ஏற்கனவே புத்தளம் மற்றும் ஆனமடுவை பிரதேசங்களில் துவிசக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய கடன் வழங்க ஆரம்பித்துள்ளன.

ஒரு துவிசக்கர வண்டியின் விலை 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் அதிகரித்துள்ளதால், அதனை கொள்வனவு செய்வதற்கான கடன்களை வழங்க ஆரம்பித்துள்ளதாக லீசிங் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *