Press "Enter" to skip to content

பிரதமரிடம் கடிதமொன்றை கையளிப்பதற்காக சென்ற பெண்கள் மீதே வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது- நிரோஷா அத்துக்கோரள

பிரதமருக்கு கடிதம் ஒன்றை கையளிப்பதற்காகவே அவரது வீட்டுக்கு முன்பாக ஒன்றுக்கூடியதாகவும் எனினும் இறுதியில் வன்முறையே கட்டவிழ்த்துவிடப்பட்டதாகவும் ஐக்கிய மகளிர் சக்தியின் செயற்பாட்டு பிரதானி நிரோஷh அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மகளிர் சக்தி என்ற முறையில் நேற்றைய தினம் நாம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை கையளிப்பதற்காகவே அவரது வீட்டை நோக்கி சென்றோம்.

ஊடகங்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் அறிவித்துவிட்டே நாம் அங்கு சென்றோம்.

300, 400 பேரை அழைத்துக்கொண்டு நாம் அங்கு செல்லவில்லை. 20,30 பெண்கள் ஒன்றிணைந்தே அவ்விடத்துக்கு சென்றோம்.

அரசியல் ஆளுமைமிக்கவரே பிரதமரை நாம் பார்க்கின்றோம். எனவே கடிதம் ஒன்றை கையளிப்பதற்காகவே நாம் அங்கு சென்றோம்.

நாம் கையளிப்பதற்கு இருந்த கடிதத்தை அவர் வெளியில் வந்து பெற்றுக்கொள்வார் என்று நம்பினோம். அவருக்கு பதிலாக வேறு யாரையும் அவர் அனுப்பும் செயற்பாட்டில் ஈடுபடமாட்டார் என்றே நாம் நினைத்தோம்.

நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வு நடைபெறும் தினம் என்று எமக்கு தெரியும் எனினும் நாம் வருவோம் என்பதை தெரிந்துகொண்டிருந்த அவர் எமது கடிதத்தை பெற்று சென்றிருக்கலாம்.

எனினும் அதற்கு பதிலாக அவர் பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் என்று 300, 400 பேரை அந்த இடத்துக்கு அவர் வரவழைத்திருந்தார்.

கொலைக்காரர்களை நிறுத்தி வைப்பது போன்றே பொலிஸார், இராணுவத்தினரை அந்த இடத்தில் குவித்திருந்தார். அதுமட்டுமல்ல கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. 20, 30 பெண்களை தாக்குதவத்றகக இத்தனை பேர் வரவழைக்கப்பட்டார்களா என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

அந்த இடத்தில் பிரதமரின் வீட்டுக்கு செல்வதற்கு எமக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை எனவே எமக்கு எப்படியேனும் அந்தக் கடிதத்தை கையளிக்க வேண்டும். அந்த இடத்தில் என்னை மிகவும் மோசமமான முறையில் தாக்கினார். பொலிஸார் மிகவும் மோசமாக செயற்பட்டதை நேற்றைய தினம் நான் அவ்விடத்தில் பார்த்தேன்.

பெண்கள் என்றும் பாராது மனிதாபிமானமற்ற முறையிலேயே நடந்துகொண்டனர்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆனாலும்கூட நாட்டின் பிரச்சினை, வரிசையில் நிற்பது குறையவில்லை. நாட்டின் பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது.

ஊடகங்கள் இந்த நாட்டில் இல்லையெனில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவர்களில் அறைவாசிபேர் தற்போதைய நிலையில் உயிரை இழக்க நேரிட்டு இருக்கும். ஊடங்கள் காரணமாகவே நேற்றைய தினம் எனது உயிரும் காப்பாற்றப்பட்டது.

ஊடகங்கள் இல்லை எனில் நேற்றைய தினம் வன்முறையை பிரயோகத்து எம்மை கொலைசெய்து இருப்பர். ஊடங்கள் பாரியளவிலான சேவையை வழங்கி வருகின்றன.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *