Press "Enter" to skip to content

எரிபொருள் விநியோகம்: நாளை முதல் புதிய நடைமுறை!

நாடளாவிய ரீதியில் நாளை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு இலக்கம் வழங்கி அதற்கேற்ப எரிபொருளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை முதல் துண்டு சீட்டை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் வாரத்தில் எரிபொருள் விலை மீண்டும் திருத்தம் செய்யப்படக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *