கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய தூதுக்குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள மன்னார் காற்றாலை மின் நிலையம், கொழும்புத் துறைமுக மேற்கு கொள்கலன் முனையம், சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையம், திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்தித் திட்டம் ஆகியவை துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது.
எரிபொருளுக்கு மேலும் கடன் வழங்குவதற்கு இந்தியத் தரப்பிலிருந்து சாதகமான பதில் வரவில்லை என்று ‘சண்டே டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
Be First to Comment