Press "Enter" to skip to content

திருமலையில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் மரணம்: வீட்டில் சேமித்த பெற்றோல் காரணமென சந்தேகம்

திருகோணமலை – உப்புவெளியில் பகுதியில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்தார்

அவரது வீட்டில் இன்று திடீர் தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், பிரதேசவாசிகள் இணைந்து அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் மரணித்துள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மூலம் தீ பரவியிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர் உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *