Press "Enter" to skip to content

நீதிமன்ற வாசலில் வீசப்பட்டது மனிதத் தலை

ஜேர்மனியில்  நீதிமன்றம் அருகே  மர்ம நபர்கள் சிலர் மனிதத் தலையொன்றை வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் பான் என்ற பகுதியில்  அமைந்துள்ள நீதிமன்றத்தின் முன்பாகவே கடந்த 28 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே சமயம் நீதிமன்றத்தில் இருந்து சற்று தொலைவில்,  தலையில்லாத உடல் ஒன்றும் பொலிஸாரால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 38 வயது மதிக்கத்தக்க ஒருவரை பொலிஸார்  சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *