Press "Enter" to skip to content

தனியார் பஸ் போக்குவரத்து முழுமையாக முடங்கும்: கெமுனு விஜேரத்ன

எதிர்வரும் இரண்டு நாட்களில் தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக தடைப்படக் கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் 5 முதல் 10 சதவீதமான தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்

கொழும்பு மற்றும் அதன் அருகிலுள்ள சில இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து டிப்போக்களில் மாத்திரம் தனியார் பேருந்துகளுக்கு நேற்றைய தினம் எரிபொருள் வழங்கப்பட்டது. அத்துடன் கொட்டாவை – மாக்கும்புர பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நேற்று சில தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஹைலெவல் வீதியில் இன்றைய தினம் சில பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

சுமார் 3 முதல் 4 நாட்கள் வரிசையில் நின்று பேருந்து பணியாளர்கள் எரிபொருளை பெறுவதோடு சில நோய்வாய்ப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் தற்போது கையிருப்பில் உள்ள டீசலை நிர்வகித்து தொடர்ந்தும் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் அலுவலக ரயில்கள் போதிய அளவில் சேவையில் ஈடுபடுவதில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *