நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிராம உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தவாறு தங்கள் பணிகளைச் செய்ய தீர்மானித்துள்ளனர் என இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அதுல சீலமானாராச்சி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கிராம உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக இன்று முதல் கடமை நிலையத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தவாறு கடமைகளை செய்ய தமது சங்கத்தினர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி: கிராம உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து கடமையாற்ற தீர்மானம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment