வழங்கும் விசேட திட்டம் இடைநிறுத்தம்! சுகாதாரப் பணியாளர்களுக்காக முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கும் ஏற்பாடுகளை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு வசதியை ஒத்திவைக்குமாறு பொது நிர்வாக அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரிடம், சுகாதார அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறு ஆய்வுக்குப் பிறகு புதிய திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 113 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் எரிபொருளைப் பெறுவதற்கு இந்த விசேட முன்னுரிமை வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Be First to Comment