வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றி நேற்றிரவு பணம், நகை என்பன களவாடப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் வயோதிபர்கள் மூவர் மற்றும் உதவியாளர் வசித்து வந்த நிலையில் நேற்றிரவு வீட்டுக்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் வீட்டில் இருந்த 700 ஸ்ரேலிங் பவுண்ஸ், 4இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 9 1/4 பவுண் நகை என்பன களவாடப்பட்டுள்ளன.
வீட்டில் இருந்தவர்களை மிரட்டியே குறித்த களவு நிகழ்த்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Be First to Comment