Press "Enter" to skip to content

தமிழரின் பிரச்சினைக்கான தீர்வைபெற அனைத்து நாடாளுமன்ற பிரதிநிதிகளும் ஒன்று கூடுங்கள்!மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்து.

தற்போதைய நெருக்கடிநிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைபப்தற்கு அனைத்து நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்க வாருங்கள் என மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே சமயத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினர்.

இதுதொடர்பில் அவர்கள் மேலும் அறிக்கையில், சகல தமிழ்க் கட்சிகளும் குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் ஒன்று கூடி இன்றைய இலங்கை அரசியல் சூழலில் எடுக்கவேண்டிய தீர்மானம் என்ன என்பதை சீராகத் தீர்மானிப்பதற்கு முன் வரவேண்டும்.

வடக்கு-கிழக்கு,மலையகம்,தெற்கு என்ற பேதமின்றி தமிழ் நாடாளுமன்ற அங்கத்தவர்கள், கட்சித் தலைவர்கள் வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்காக ஒன்று கூடவேண்டிய தருணம் இது. எனவே அறிவு பூர்வமாக தீர்க்க தரிசனத்தோடு ஒன்றுகூடி ஆராயுங்கள்.இது காலத்தின் கட்டாயம்.இவ்வேளை நீங்கள் ஒன்றுகூடி ஆராய மறுப்பீர்கள் ஆனால் அது மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.

இவ் ஊடக சந்திப்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள், யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ரிஷி தொண்டுநாத சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *