Press "Enter" to skip to content

நாடாளுமன்ற வீதியில் இரும்பு வேலி தகர்ப்பு

நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் இன்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டது.

மேற்படி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர்புகை மற்றும் தண்ணீர்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இதன்போதான மோதலில் 15 பேர் காயமடைந்ததுடன், அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு – தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற வீதியில் இடப்பட்டிருந்த இரும்பு வேலியை பெக்கோ இயந்திரம் கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் தகர்த்தெறிய முற்பட்டுள்ளனர்.

அத்துடன், மேற்படி மோதல் சம்பவத்தின்போது, அங்கிருந்த நோயாளர் காவு வண்டியொன்றின் மீதும், தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *