Press "Enter" to skip to content

டீசல் கப்பல் இன்று இலங்கை வந்தது!

40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று (16) இலங்கையை வந்தடைந்துள்ளது. அதன் மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், டீசல் தாங்கிய 2ஆம் கப்பல் இன்று மாலை நாட்டை வந்தடையும் என்றும் பெற்றோல் தாங்கிய கப்பல் அடுத்த வாரம் (18-19 ஆம் திகதி) நாட்டை வந்தடையுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா ஐஓசி நிறுவனம் தொடர்ந்து விநியோகம் செய்து வந்தாலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் மிக நீண்ட வரிசைகள் உள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் எரிபொருள் விநியோகத்தை நிர்வகிப்பதற்காக புதிய மென்பொருள் ஒன்றும் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, இன்று எரிபொருள் விநியோகம் செய்யும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த விசேட அறிவிப்பை சிபெட்கோ வெளியிட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *