புதிய ஜனாதிபதியாக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் இறுதி சமயத்திலே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என அவர் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு மற்றும் மத்திய செயற்குழு என்பன கூடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார்.
Be First to Comment