Press "Enter" to skip to content

போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பம்; ஜனாதிபதி மாளிகையில் அனைத்து கைரேகைகளும் சேகரிப்பு

பாராளுமன்ற நுழைவு வாயிலுக்கு அருகில் அண்மையில் ஏற்பட்ட கடும் பதற்ற சூழ்நிலையின் போது பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான இரண்டு துப்பாக்கிகள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தின் பின்னர் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.

காணாமல் போன துப்பாக்கிகளைக் கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக ஜனாதிபதி மாளிகையில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்களின் கைரேகைகள் அனைத்தையும் பொலிஸார் பெற்று அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

எதிர்கால பயன்பாட்டிற்காக அவை பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *