நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19ம் திகதி) விடுதலை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் ஏற்கனவே நீதியமைச்சினால் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ரஞ்சனின் தண்டனை காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அவர் மனஅதிருப்தியில் இருப்பதாகவும், பதில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை ஏற்று வெளியில் வருவாரா என்ற சந்தேகம் இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன
ரஞ்சனுக்கு செவ்வாய்க்கிழமை விடுதலை, ஆனால்…
More from UncategorizedMore posts in Uncategorized »
- பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் !
- பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா? யாழில் பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு கவனயீர்ப்பு..!
- மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
- சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானம்
- கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி!
Be First to Comment