Press "Enter" to skip to content

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு உரும்பிராயில் நாடி வைத்தியம்! பரிதாபகரமாக சிறுவன் உயிரிழப்பு..

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நாடி வைத்தியம் கொடுக்கப்பட்ட நிலையில் சிறுவன் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளான்.

வவுனியாவை சேர்ந்த 15 வயதான குறித்த சிறுவனுக்கு யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள ஒரு நாடி வைத்தியரிடம் வைத்தியம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சிறுவனும் குடும்பத்தாரும் வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் சிறுவன் நேற்றுமுன்தினம் திங்கள் கிழமை உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் சிறுவனின் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவந்திருக்கன்றனர்.

அங்கு நடத்தப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் சிறுவனுக்கு குருதிப் புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதுடன்,

மரண விசாரணையில் சிறுவனுக்கு உரும்பிராயில் உள்ள ஒரு நாடி வைத்தியரிடம் நாடி வைத்தியம் செய்ததாக பெற்றோர் கூறியுள்ளனர்.

குருதிப் புற்றுநோய்க்கு சிறப்பு மருத்துவம் உள்ள நிலையில் நாடி வைத்தியம் சிறந்தது என்று சிறுவனின் பெற்றோரினால் நம்பப்பட்ட நிலையில் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *