Press "Enter" to skip to content

மைத்திரி, மனோ, ஹக்கீம், ரிஷாட் டலஸிற்கு ஆதரவு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது

மக்களின் கோரிக்கையை ஏற்று சர்வக்கட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக்கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் என்பனவும் டலசுக்கு ஆதரவு வழங்கவுள்ளன.

மேலும், டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *