அடுத்த 30 நாட்களுக்கு நாட்டில் போதுமான டீசல் இருப்புக்கள் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ( CPC) உறுதியளித்துள்ளது.
இதேவேளை,நாட்டில் 22 நாட்களுக்கு போதுமான பெற்றோல் கையிருப்பு இருப்பதாக CPC தெரிவித்துள்ளது.
நேற்று நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 4000 மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3,000 மெட்ரிக் தொன் பெற்றோல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஒவ்வொரு வாகனத்தின் இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்திற்கேற்ப எரிபொருள் வழங்கும் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அகில இலங்கை பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் விளைவாக எரிபொருளுக்கான வரிசைகளும் குறைந்து வருவதாக அதன் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வாவும் உறுதியளித்துள்ளார்.
Be First to Comment