Press "Enter" to skip to content

ரட்டா அதிரடியாகக் கைது

கோட்டாகோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரான சமூக செயற்பாட்டாளர் ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற தடை உத்தரவை மீறி மே 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக ரட்டா கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றப் பின்னர் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *