Press "Enter" to skip to content

காதலனுடன் நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற யுவதி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயம்

யாலேகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய யுவதியே இவ்வாறு நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக தனது காதலி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக குறித்த இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து காணாமல் போன குறித்த யுவதியை தேடும் பணிகளை பொலிஸார், இராணுவம், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் சேர்நது மேற்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *