Press "Enter" to skip to content

யாழ்.குளப்பிட்டி எரிபொருள் வரிசையில் இடம்பெற்ற மோதலின்போது, புடைவைக் கடை மீதும், அதன் உரிமையாளர் மீதும் தாக்குதல்..!

யாழ்.குளப்பிட்டி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது அப்பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையமொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு இடையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குறித்த விற்பனை நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இச் சம்பவத்தில் குறித்த விற்பனை நிலையத்தின் கண்ணாடி கதவுகள் அடித்து நொறுக்கப்படுள்ளது. சம்பவம் தொடர்பில் புடவை விற்பனை நிலைய உரிமையாளரினால் யாழ்.பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *