Press "Enter" to skip to content

சுற்றுலாத்துறையினருக்கு விசேட எரிபொருள் அட்டை அறிமுகம்!

சுற்றுலாத்துறையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதி கியு.ஆர் குறித்து இன்று காலை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுற்றுலாத்துறையினருக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு தொலைபேசி எண் மூலம் பல வாகனங்களைப் பதிவு செய்தல், சிறப்புத் தேவைப் பிரிவை உருவாக்குதல், வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளுக்கான கியு.ஆர் முறைமை அறிமுகம் உட்பட பல விசேட யோசனைகள் தொடர்பிலும், இன்றைய சந்திப்பின்போது,
கலந்துரையாடப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *