சர்வகட்சி அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என உறுதியாக நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி உடன்படிக்கையை உருவாக்குவதற்கும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கும் பாராளுமன்றத்தில் பல கட்சிகளுடன் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பிரதான அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்பதால், எதிர்கால அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு நிறைவேற்று அதிகாரியை அவர்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தனிநபரை தெரிவு செய்து பின்னர் 10 பேர் கொண்ட அமைச்சரவையை அமைப்பதற்கு பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செயற்பட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தப் பதவிக்கு பல பெயர்கள் முன்மொழியப்பட்ட போதிலும், அவர்களால் ஒரு உடன்பாட்டுக்கு வந்து குறுகிய காலத்திற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்





Be First to Comment