நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் அலகு செயலிழந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பவியலாளர்கள் கோளாறினை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2 ஆவது அலகில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் 3 ஆவது அலகு தொடர்ந்து செயற்பட்டுவருகிறது.
மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் (West coast) மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்
Be First to Comment