Press "Enter" to skip to content

யாழ்.பல்கலைகழக துணைவேந்தரின் அலுவலகத்திற்குள் புகுந்து தற்கொலைக்கு முயற்சித்த பேராசிரியர்! தடுத்த துணைவேந்தர்

யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் அலுவலகத்திற்குள் நுழைந்து துணைவேந்தர் முன்னிலையில் துறைத்தலைவர் பதவிகோரி பேராசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.பல்கலைகழகத்தில் துறை ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார்.

அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால், அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது. இந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால்

வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடைநிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடித்தார். அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர், நேற்றைய தினம் திங்கட்கிழமை தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளிப்பேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த குறித்த பேராசியர் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு, அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *