Press "Enter" to skip to content

சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை ?

முதல் கட்டமாகக் குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும். அதன்பின்னர் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe) தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! | Tamil Political Prisoners Will Release Wijeyadasa

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் என்னுடனும் பேச்சு நடத்தியுள்ளனர்.

 

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! | Tamil Political Prisoners Will Release Wijeyadasa

அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். அதற்கமைய முதல் கட்டமாகக் குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும்.

அதன்பின்னர் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவற்றுள் அரசியல் கைதிகள் விவகாரமும் ஒன்று. இதனைக் கருத்தில்கொண்டு அரசு செயற்படும்”  என்றார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *