Press "Enter" to skip to content

மண்ணெண்ணெயை நம்பியுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி நிவாரணம்

மண்ணெண்ணெயை நம்பியுள்ள, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளுக்கு நேரடியாக நிதி நிவாரணத்தை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

மின்சக்தி வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெய் விலைத் திருத்தத்துக்கான அவசியம் பல ஆண்டுகளாக நிலவி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டமை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டமடைவதற்குரிய ஒரு காரணியாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 340 ரூபாவாக அதிகரித்துள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *