Press "Enter" to skip to content

மஹிந்த ராஜபக்சவின், மூன்றாவது மகனுடைய விருந்தகம் எரிப்பு! நால்வர் கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூன்றாவது மகன் ரோஹித்த ராஜபக்சவுக்கு சொந்தமானது என்று கூறப்படும் சொகுசு விருந்தகத்துக்கு, கடந்த மே 10ஆம் திகதியன்று தீயூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொலன்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கராஜாவுக்கு அருகாமையில் கொலன்ன, எம்பிலிப்பிட்டிய கொங்கலகந்தவில் கிரீன் ஈகோ லொட்ஜ்’ என்ற இந்த விருந்தகம் அமைந்துள்ளது.

மே 10 அன்று எதிர்ப்பாளர்களால் இந்த விருந்தகம் தீக்கிரையாக்கப்பட்ட போது, அது மஹிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவருடையது என்ற தகவல் வெளியானது.

எனினும் இரண்டாவது மகனான யோசித்த, அது தம்முடைய விருந்தகம் அல்ல என்று மறுத்திருந்தார். எனினும் பொலிஸார் விசாரணைகளின்போது, குறித்த விருந்தகம், மூன்றாவது மகனான ரோஹித்தவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

மூன்றாவது மகனான ரோஹித்த தனது தந்தை பிரதமராக இருந்த காலத்தில் எந்த உத்தியோகபூர்வ பதவியையும் வகிக்கவில்லை. இருப்பினும் அவர் அடிக்கடி அலரிமாளிகையில் பிரசன்னமாகியிருந்தார். அவருடைய வருமான ஆதாரம் தொடர்பாகவும் தகவல் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *