இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட்டின் முத்துராஜவெல டெர்மினல் இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கவில்லை, ஆனால் இலங்கை போக்குவரசத்து சபையின் டிப்போக்களுக்கு மாத்திரமே எரிபொருளை விநியோகித்தது.
எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த முனையம் தீர்மானித்துள்ளது.
நேற்று நாட்டை வந்தடைந்த ஒட்டோ டீசல் கப்பலை இறக்கத் தொடங்கியுள்ளது.
தாமதமான சுப்பர் டீசலை இறக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் விநியோக செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டு வர 24 மணி நேரமும் உழைத்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், டீசலில் இயங்கும் பஸ்கள், பாடசாலை வேன்கள் மற்றும் பல வாகனங்கள் இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கின்றன.
Be First to Comment